கொடைக்கானல், ஜன. 21: கொடைக்கானல் வில்பட்டி கிராம ஊராட்சிக்கு சில சமூகஆர்வலர்கள், தன்னார்வலர்கள் கடந்த 2014ம் ஆண்டு ரூ.8 லட்சம் மதிப்பிலான குப்பை அள்ளும் டிராக்டரை டிரைலருடன் வழங்கினார். இதனை அப்போது தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த மலைச்சாமி பெற்று கொண்டார். ஆனால் மலைச்சாமி, அந்த வாகனத்தை ஊராட்சியின் பெயரில் பதிவு செய்யாமல் தனது பெயரில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்கண்ணன் கடந்த ஆண்டு அந்த டிராக்டரின் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஊராட்சி பெயருக்கு பதிவு செய்து வழங்க உத்தரவிட்டார்.