திண்டுக்கல், ஜன. 21: திண்டுக்கல் மாவட்டத்தில் அஞ்சலக அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சகாயராஜு தெரிவித்ததாவது: கொரொனா காலத்திலும் பொதுமக்களுக்கு கடிதங்கள், பார்சல் வழங்குவது மட்டுமின்றி சேமிப்பு திட்டங்களில் முதன்மையாக தனது அனைத்து சேவைகளையும் அஞ்சல் துறை தங்குதடையின்றி வழங்கி வருகிறது. மேலும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முடியாதவர்கள் சபரிமலை பிரசாதத்தை ரூ.450 மட்டும் தலைமை- துணை தபால் நிலையங்களில் முன் பணம் செலுத்தி தபால் வழியாக பெற்று கொள்ளலாம்.