சின்னாளபட்டி, ஜன. 21: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கசவனம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குரும்பபட்டியை சேர்ந்த அதிமுக, அமமுக, பாஜ, நாம்தமிழர் கட்சிகளை சேர்ந்த 75 இளைஞர்கள் அந்த கட்சிகளிலிருந்து விலகி 4வது வார்டு உறுப்பினர் சிவமுத்து தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பின்னர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ கூறுகையில், ‘கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.