கொடைக்கானல், ஜன. 21: கேரளாவை சேர்ந்த சுபிஸ் என்பவர் கொடைக்கானல் தனியார் ஓட்டலில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மேரி (24) பணியாற்றி வந்தார். சுபஸ்க்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் கேரளாவில் உள்ளது. எனினும் கடந்த 2 ஆண்டுகளாக சுபிசும், மேரியும் நாயுடுபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கொரோனா பரவலால் கொடைக்கானலில் பல மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது.