ஊட்டி, ஜன. 20: மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அணில்காமி. இவர் இத்தலார் ஜேபிஆர்., அக்ரோ பார்மில் உதவியாளராக பணியாற்றினார். கடந்த செப்டம்பர் 4ம் தேதி நடந்த விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இழப்பீடு கோரி குன்னூர் தொழிலாளர் இணை அதிகாரியிடம் அவரது உறவினர்கள் சார்பில் மனு தாக்கல் செயயப்பட்டது.