ஈரோடு, ஜன. 20: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வரும் 24ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இது குறித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.பி. ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வரும் 24ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி அவருக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.