ஈரோடு, ஜன. 20: பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூர், அமராவதி நகரை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் கூலி வேலைக்கு சென்று தனது 15 வயது மகளை காப்பாற்றி வந்தார். அந்தியூரில் உறவினர் வீட்டில் தங்கி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 8ம் தேதி முதல் காணாமல் போய்விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் பல்வேறு இடங்களில் தேடியும் மகள் குறித்த எவ்வித தகவலும் கிடைக்காததால், இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க கார் வாடகைக்கு எடுத்து கொடுக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுள்ளனர்.இது தொடர்பாக நேற்று முன்தினம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அந்த சிறுமியின் தாய் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகளை காணவில்லை என்று பவானி போலீசில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.