மாணவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

காரைக்குடி, ஜன.20: காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளிக்கு வந்த மாணவர்களை  பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் ஆசிரியர்கள் சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுத்தனர். தவிர பூங்கொத்து மற்றும் பேனா, பென்சில், ஸ்கேல் உள்பட பொருட்கள் வழங்கி வரவேற்றனர். தவிர மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். முதல்நாளான நேற்று 10ம் வகுப்பில் 270 பேரில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர்.  தேவகோட்டை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட 120க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் அரசு விதிமுறைக்கு உட்பட்டு திறக்கப்பட்டது.

Related Stories: