பழநி, ஜன. 20: பழநியில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பேரவை தலைவர் மில்லர் மண்டேலா நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலின் மூலம் மதவெறியை முறியடிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும். ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும். இதற்காக 200க்கும் மேற்பட்ட லயோலா கல்லூரி மாணவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளோம். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல இடங்களில் டெபாசிட் இழக்கும். இவ்வாறு கூறினார்.