எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

நாமக்கல், ஜன.20: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாமக்கல் நகர அதிமுக சார்பில், பரமத்தி ரோடு செல்லம்ப கவுண்டர் பூங்கா முன்பு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கினார். நாமக்கல் ஏஎஸ் பேட்டை மற்றும் மெயின் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலை, குளக்கரை திடல் மற்றும் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி எம்எல்ஏ பாஸ்கர் மரியாதை செலுத்தினார். மேலும் நாமக்கல் சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் நகரில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம்,முன்னாள் நகராட்சி துணை தலைவர் சேகர், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராஜா, நகர துணைச்செயலாளர் நரசிம்மன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன், வகுரம்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா ரகுமான், நாமக்கல் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் விஜய் பாபு, துணைத்தலைவர் பொரி சண்முகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: