நாமக்கல், ஜன.20: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்ளும் நேற்று காலை முதல் மாலை வரை 11 இடங்களில் மாஸ்க் அணியாமல் டூவீலர் மற்றும் கார்களில் வந்த 110 பேர் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதற்காக முகக்கவசம் அணிதல்அவசியமின்றி வெளியில் சுற்றி திரியக்கூடாது போன்ற அறிவுரைகள் போலீசாரால் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று தொடர்பான விதிமீறல்களுக்கு வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் விதிமுறைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நாமக்கல் எஸ்பி சக்தி கணேசன் கேட்டுக்கொண்டார்.