காச நோய் கண்டறியும் முகாம்

சேந்தமங்கலம், ஜன.20: எருமப்பட்டி அடுத்துள்ள காளிசெட்டிப்பட்டி ஊராட்சியில்,காசநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் லலிதா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பேபிகற்பகம் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் முன்னிலையில் சுகாதாரத் துறை பணியாளர்கள், மாவட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், எடை குறைவு போன்ற அறிகுறிகள் உள்ளதா என பொதுமக்களிடம் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.

Related Stories: