திமுக சார்பில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

ராசிபுரம், ஜன.20  நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய திமுக, பிள்ளாநல்லூர் பேரூர் இளைஞரணி சார்பில் பொங்கல் விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி நடந்தது.பின்னர் வெற்றி பெற்ற அணியினருக்கு பேரூர் பொறுப்பாளர் சுப்ரமணியம் முன்னிலையில், ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் பாலசந்திரன் ஆகியோர் முதல் பரிசு பெற்ற ஆட்டையாம்பட்டி அணியினருக்கு ₹15,001மற்றும் சுழற்கோப்பை,  2ம் பரிசு பெற்ற குகுசாமிபாளையம் அணியினருக்கு  ₹10,001, 3ம் பரிசு பெற்ற மல்லசமுத்திரம் அணியினருக்கு ₹8,000, 4ம் பரிசு பெற்ற ராசிபுரம் அணியினருக்கு ₹5001 வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த கிரிக்கெட் வீரர், பந்துவிச்சாளர், தொடர் நாயகன் விருதுகளை வழங்கி பேசினர். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளரும், உறுப்பினருமான அருளரசன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா வெங்கடாசலம், முன்னாள் செயலாளர் பழனிவேல்,மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். ...

Related Stories: