கலெக்டர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் மனு

கிருஷ்ணகிரி, ஜன.20: மத்தூர்பதி இருளர் காலனியை சேர்ந்த பொதுமக்கள், மத்தூர் ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் மகபூப்பாஷா தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:  மத்தூர்பதி இருளர் காலனியில், இருளர் இனத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் 75 வருடங்களாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு கட்டி கொடுத்த வீடு  இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, அந்த வீடுகளை இடித்துவிட்டு, புதியதாக வீடு கட்டி கொடுக்க வேண்டும். தற்போது ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு, மூன்று குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எனவே, தனி வீடு, தனி பட்டா வழங்க வேண்டும். எங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால், உயர்கல்வி பயில முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க   வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: