திமுகவில் இணைந்த பாமகவினர்

பென்னாகரம், ஜன.20:  பென்னாகரம் தொகுதி ஏரியூர் ஒன்றியம் நாகமரை ஊராட்சி வன்னியர் நகரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஊராட்சி செயலாளர் திருமுருகன் தலைமையில், பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி, தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ முன்னிலையில், திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்கள் சம்பத், முருகேசன், பேரூர் செயலாளர் வீரமணி, கவுன்சிலர் சென்னையன், சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: