×

பைக் திருடியவர் கைது

திருப்பூர், ஜன. 19: திருப்பூர் அருகே இச்சிபட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன் (38). இவர் கடந்த வாரம் மங்கலத்தில் உள்ள வங்கி முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்த போது பைக் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ‘சிசிடிவி’ பதிவை கைப்பற்றி விசாரித்தனர். இதில், மங்கலம், கணபதிபாளையம், சத்யா நகரை சேர்ந்த செல்வம் (40) என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது.அவரை கைது செய்து, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. செல்வம் 13 இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது.

Tags : Bike thief ,
× RELATED முத்தையாபுரத்தில் பைக் திருடியவர் கைது