×

தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

பொங்கலூர், ஜன. 19: திருப்பூர் வடக்கு மாவட்டம் பொங்கலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையபாளையத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன்,  பொங்கலூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அசோகன்,  சேர்மன் வக்கீல் குமார், வைஸ் சேர்மன் அபிராமி அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கள்ளிப்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லோகநாதன் வரவேற்றார் . மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர்  ராஜசேகர்,  கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.  இதில் அதி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றி கையொப்பமிட்டனர்.

Tags : DMK People ,meeting ,Village Council ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...