×

தொழிலாளிக்கு கத்திக்குத்து- 3 பேர் கைது

கோவை, ஜன. 19: மேட்டுப்பாளையம் சிறுமுகை ராஜபாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் அரவிந்தன் (23). சமையல் தொழிலாளி. சம்பவத்தன்று, இவரது வீட்டின் முன்பு 3 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர். இதை பார்த்த அரவிந்தன் மற்றும் அவரின் நண்பர் பிரதீப்குமார், மது குடித்து கொண்டிருந்த வாலிபர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த 3 வாலிபர்கள் அரவிந்தன் மற்றும் பிரதீப்குமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இது குறித்து அரவிந்தன் சிறுமுகை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், அந்த நபர்கள் கே.என்.ஜி புதூரை சேர்ந்த தினேஷ்குமார் என்கிற வெங்கடேஷ் (25), அரவது நண்பர்கள் ஜே.ஜே நகரை சேர்ந்த பூபதி (23), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த அருண்குமார் (20) என தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை