×

டி.எத்திலப்பன்பட்டி ஊரின் நடுவே உயர் அழுத்த மின்பாதை அமைக்க மக்கள் கடும் எதிர்ப்பு

விருதுநகர், ஜன.19:  விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி டி.எத்திலப்பன்பட்டி கிராம மக்கள் அளித்த மனு:  துலுக்கப்பட்டி மின்வாரியம் சார்பில் டி. எத்திலப்பன்பட்டி கிராம டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆவுடையாபுரம் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் உயர்மின் அழுத்த மின்கம்பிகள், கம்பங்கள் அமைக்கும் பணியை துவக்கி உள்ளது. ஊரின் நடுவில் உள்ள பொதுநடைப்பாதை, பாலர்பள்ளி, கலையரங்கம், மேல்நிலைத்தொட்டி, கோயில் உள்ள தடங்களின் மேல் கொண்டு செல்ல உள்ளனர். எனவே, பொதுமக்கள் கூடும் இடங்களின் மேல்பகுதியில் உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லும் பணியை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக மின்வாரியத்தில் மனு அளித்தும் தொடர்ந்து பணிகள் செய்து வருகின்றனர். எனவே, உடனடியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஊரின் நடுவில் உயர்மின் அழுத்த பாதை அமைக்கும் பணியை நிறுத்தி, மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல உத்தரவிட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Tags : town ,D.Ethilappanpatti ,
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...