×

ஓடை பாலங்கள் சேதம் ராஜபாளையம் மக்கள் அவதி

ராஜபாளையம், ஜன. 19:  ராஜபாளையம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் ஓடை பாலங்கள் சேதமடைந்து கிடப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் ஓடை பகுதிகளில் அமைந்துள்ள பாலங்கள் பல வருடங்களாக சேதமடைந்து கிடக்கின்றன. தற்போது தொடர் மழை காரணமாக கழிவுநீரோடு மழைநீரும் சேர்ந்து அதிகளவு ஓடைகள் வழியாக செல்கின்றன. ஆனால், அவை சேதமடைந்து இருப்பதால் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. அத்துடன் பாலம் சேதமடைந்த பகுதி கடந்து செல்லும்போது விபத்து ஏற்பட்டு பலரும் ஆபத்தான நிலையில் கடந்து வருகின்றனர் ஆகவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த பாலங்களை சரி செய்ய வேண்டும் என நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridges ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...