×

தேனி அருகே அரண்மனைப்புதூரில் நாளை மக்கள் கிராமசபை கூட்டம்

தேனி, ஜன. 19: தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் கிராமத்தில் நாளை (ஜன.20) காலை 9 மணிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பெண்கள் அமரும் வகையில் சுமார் 7 ஏக்கர் இடத்தில் மைதானம் அமைக்கும் பணி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடந்து வருகிறது. இப்பணியை தங்கதமிழ்செல்வனும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனும் பார்வையிட்டனர். இதில் எம்எல்ஏக்கள் ஆண்டிபட்டி மகாராசன், பெரியகுளம் சரவணக்குமார், போடி தொகுதி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், தேனி தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ரத்தினசபாபதி, தேனி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர், தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, தேனி நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தேனி மாவட்டத்திற்கு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பெரியகுளத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஒருங்கிணைந்த தேனி மாவட்ட திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் மற்றும் தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு தேனியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை ஓட்டலில் இருந்து புறப்பட்டு அரண்மனைப்புதூரில் நடக்கும் மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கூட்டம் முடிந்ததும் தேனியில் இருந்து மதியம் புறப்பட்டு மதுரை செல்கிறார்.

Tags : village council meeting ,Theni ,Aranmanaiputhur ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு