மானாமதுரை, ஜன.19: மானாமதுரை சிப்காட் பகுதியில் குறைந்த மின்அழுத்தம் காரணமாக மின்சாதனங்கள பழுதாவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மானாமதுரை தாலுகா அலுவலகம் அருகே எம்ஜிஆர் நகர், ராஜேந்திரன் நகர், கங்கையம்மன் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், தாலுகா அலுவலகம், சிப்காட் திட்ட அலுவலகம், காவல்நிலையம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. கடந்த இரண்டு வார ங்களுக்கு மேலாக இப்பகுதியில் குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதால் மின்விசிறி, அயர்ன்பாக்ஸ், மிக்சி, கிரைண்டர், நீர்மூழ்கி மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை இயக்க முடியவில்லை. குறைந்த மின் அழுத்தத்தால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாவதால் அவற்றை இயக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.