22ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, ஜன.19: சிவகங்கையில் ஜன.22 அன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜன.22 காலை 11 மணியளவில் நடக்க உள்ளது. கொரோனா தொற்று பரவல் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகளின் தனிப்பட்ட கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கோரிக்கை மனுக்களை குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நேரடியாக வழங்கலாம். பொது கோரிக்கைகள் தொடர்பாக வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் தங்களது கோரிக்கை தொடர்பான கருத்தை மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டரிடம் நேரிடையாக தெரிவிக்கலாம். எனவே, விவசாயிகள் தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு விதிமுறைகளை பின்பற்றி குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: