கடல்அட்டை 20 கிலோ பறிமுதல்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.19: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடல் அட்டை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 20 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. தேவிபட்டிணம் ஆர்.சி காலனி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் சம்சத் அலி(32). இவர் அரசால் தடை செய்யப்பட்ட கடல்  அட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனைக்கு கொண்டு செல்ல உள்ளதாக தேவிபட்டினம் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் தெற்கு தோப்பில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும்  உயிருடன் கூடிய கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: