திமுக சமத்துவ பொங்கல் விழா

பரமக்குடி, ஜன.19: பரமக்குடி மேற்கு  நகர்  திமுக சார்பாக சமத்துவ பொங்கல் மற்றும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர் திமுக மேற்கு பொறுப்பாளர்  ஜீவரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் முருகேசன், பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்,  நகர செயலாளர் சேது கருணாநிதி, இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி நகர் 1வது வார்டு முதல் 18வது வார்டு வரை தமிழர்களின் பாரம்பரியமான மாட்டுவண்டியில் சென்று கட்சி கொடியினை ஏற்றிவைத்தார். விழாவில் அதிமுகவை நிராகரிப்போம், திமுகவை ஆதரிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்  கிட்டு, வழக்கறிஞர் அணி கணேசன்,  திமுக மகளிர் அணி நிர்வாகிகள் செல்வி, சர்மிளா பாண்டியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: