×

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை

மதுரை, ஜன.19:  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். அவர் பாசிங்காபுரம் வந்தபோது, அப்போது, முதல்வரிடம் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில பொருளாளர் குணசேகரன் தலைமையில், மாவட்டத்தலைவர் பாண்டி, மாவட்டச் செயலாளர் லலிதா உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதில், “தமிழகம் முழுவதும் 67 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சத்துணவு அமைப்பாளர் இறந்தால் அவரது மனைவிக்கோ அல்லது கணவருக்கோ பென்சன் கிடையாது. எனவே, சத்துணவு அமைப்பாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கி, அவர்கள் இறந்தால், அவர்களின் வாரிசான கணவர் அல்லது மனைவி இந்த பென்சனை பெறுவதற்கு வாரிசு பென்சனாக அறிவிக்க வேண்டும்” என கூறியிருந்தனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...