தவறி விழுந்த தொழிலாளி சாவு

திருமங்கலம், ஜன.19:  திருமங்கலம் அருகே கட்டிலில் தூங்கிய கட்டிட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார். திருமங்கலம்  அடுத்துள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(45). கட்டிடத் தொழிலாளி. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாண்டியராஜன் கட்டிலில் தூங்கியுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்து  தலையில் காயம் ஏற்பட்டது. உறவினர் இவரை மீட்டு திருமங்கலம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பலனின்றி நேற்று  உயிரிழந்தார். சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: