மின் வாரிய அதிகாரிக்கு ஓராண்டு சிறை

திண்டுக்கல், ஜன. 19: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கயிறு தயாரிப்பு ஆலைக்கு மின் இணைப்பு வழங்க கடந்த 2009ல் அப்போதைய மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் ராஜேந்திரன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கடந்த 2014ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், ‘நீதித்துறை நடுவரும் சிறப்பு நீதிபதியுமான செல்வக்குமார், ராஜேந்திரனுக்கு (61) ஓராண்டு சிறை தண்டனை, ரூ.60 ஆயிரம் அபாரதம் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: