நாங்குநேரி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி

நாங்குநேரி, ஜன. 19: நாங்குநேரி அருகே பைக் விபத்தில்  வாலிபர் பரிதாபமாக இறந்தார்.  நாங்குநேரி அருகே தெற்கு ஆரம்பூண்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் முருகன் (30). மேளக் கலைஞரான இவர் சம்பவத்தன்று பணிநிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். உன்னங்குளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது நிலைதடுமாறிய இவர் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த முருகனை அப்பகுதியினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: