கணக்கபிள்ளை வலசையில் இன்று பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பு விழா

தென்காசி, ஜன.19: தென்காசி அடுத்த கணக்கபிள்ளை வலசையில் இன்று (19ம் தேதி) மாலை 5.30 மணிக்கு பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பு விழா  நடக்கிறது. தென்காசி மாவட்டத்தில் இளம்கிரிக்கெட் வீரர்களை உருவாக்க ஏதுவாக அவர்களுக்கு பயிற்சி அளிக்க அதி நவீன தொழில்நுட்பம், பயிற்சியாளர்கள் வசதியுடன் கூடிய பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சி நிறுவன திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தென்காசி கலெக்டர் சமீரன், எஸ்பி சுகுணா சிங் பங்கேற்கின்றனர். பிரீமியர் ராமன் முன்னிலை வகிக்கின்றார்.  ஏற்பாடுகளை பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனத்தலைவர் நாத் ராமன்  செய்து வருகிறார்.

Related Stories: