×

சேரன்மகாதேவியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வீரவநல்லூர், ஜன.19: சேரன்மகாதேவியில் அதிமுக சார்பில் ஒன்றிய, நகர நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டம் நடந்தது.  எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை வகித்தார். முன்னாள் சட்ட அமைச்சர் இசக்கிசுப்பையா முன்னிலை வகித்தார். கலைப்பிரிவு மாவட்டச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பது. சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பை  தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கம், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் கூனியூர் மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் செவல் முத்துச்சாமி, பார்வதி பாக்கியம், தலைமைக் கழகப் பேச்சாளர் குமுதா பெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் பாளை முத்துக்குட்டிபாண்டியன், சேரன்மகாதேவி கருத்தபாண்டி, ஒன்றிய துணைச்செயலாளர் கணபதி, நகரச் செயலாளர்கள் கோபாலசமுத்திரம் திருமலைநம்பி, மேலச்செவல் முருகன், பத்தமடை சங்கரலிங்கம், வீரவநல்லூர் சுப்பிரமணியன், கல்லிடைக்குறிச்சி சங்கரநாராயணன், மணிமுத்தாறு ராமையா, அம்பாசமுத்திரம் அறிவழகன், மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன்பாபு,  சேரன்மகாதேவி மாரிச்செல்வம், உச்சிமாகாளி, சேரன்மகாதேவி நகர இளைஞரணி மாசானம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். சேரன்மகாதேவி நகரச் செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.

Tags : AIADMK ,executives ,meeting ,Cheranmakhadevi ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...