ரயில் மோதி மூதாட்டி பலி

கோவில்பட்டி, ஜன.19: கோவில்பட்டியில் ரயில் மோதி மூதாட்டி இறந்தார்.கோவில்பட்டி ரயில் நிலையத்தை அடுத்த வேலாயுதபுரம் ரயில்வே கேட் தண்டவாளத்தில் இறந்த நிலையில் மூதாட்டி சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் சங்கரலிங்கபுரம் 4வது தெருவை சேர்ந்த பிச்சையா மனைவி பூலம்மாள் (72) என்பதும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: