ஆறுமுகநேரி,ஜன.19:ஆத்தூர் மற்றும் புன்னைக்காயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தொடர்மழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முக்காணி, ஆத்தூர், மேலாத்தூர், புன்னைக்காயல் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் கனிமொழி எம்பி பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேலாத்தூர் ஜே.ஜே.நகர், அருந்ததியர்காலனி பொதுமக்களை சந்தித்து சுமார் 70 பேருக்கு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார். தொடர்ந்து புன்னைக்காயல் பகுதிக்கு சென்ற கனிமொழி எம்பி அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, திருமண மண்டபத்தில் தங்கியிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைதொடர்ந்து புன்னைக்காயல் பங்குத்தந்தை பிளாங்கிளினை சந்தித்தார்.