மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

சேலம், ஜன.19: இடைப்பாடி அருகே, மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைப்பாடி அருகே, கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டி கிராமத்தில், மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று மதியம் தர்மபுரியில் இருந்து வந்தார். சேலம் மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், பகுதி செயலாளர் சக்கரை சரவணன் மற்றும் வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் அசோக் டெக்ஸ் அசோகன், தினகரன், ஒன்றிய செயலாளர்கள் ரெயின்போ நடராஜன், ரவிச்சந்திரன், ரமேஷ், அறிவழகன், செல்வக்குமார், பாலசுப்பிரமணி, அன்பழகன், நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாணவரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, மகேந்திரன், வர்த்தக அணி அமைப்பாளர் ஆட்டுக்காரனூர் பிரபு, சேலம் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி சங்கரன்,  நிர்வாகிகள் செட்டி சுப்பிரமணி, வெள்ளி சீனி, பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: