×

எருதாட்ட விழா கோலாகலம்

இளம்பிள்ளை, ஜன.19: இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை கிராமம் அய்யனூர் பகுதியில்,  ராஜகணபதி மற்றும் மாதேஸ்வரன் கோயிலில் தை திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட  விழா நடந்தது. இதை சங்ககிரி எம்எல்ஏ ராஜா துவக்கி வைத்தார். எருதாட்டத்தில்  40க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற  இளைஞர்கள்  சீறிப்பாய்ந்து வந்த காளைகளை கயிற்றில் இருபுறமும் பிடித்தவாறு  விரட்டி சென்றனர். விழாவை தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பாட்ட  நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் ஊர்கவுண்டர் முனுசாமி, மகுடஞ்சாவடி ஒன்றிய  குழு தலைவர் லலிதா ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் விஜயா தங்கராஜ் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை