×

வழுக்குமரம் ஏறுவதில் தகராறு வாலிபரை தாக்கிய 2 பேர் கைது .

சேந்தமங்கலம், ஜன.19: சேந்தமங்கலம் வடுகப்பட்டியில், நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையையொட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி(25), அஜித்(23) ஆகியோர், டூவீலரில் வேகமாக சென்றுள்ளனர். போட்டியை நடத்தி வரும் வல்லரசு(34) என்பவர், இருவரையும் மெதுவாக செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி, அஜித் இருவரும் சேர்ந்து வல்லரசை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்கு பதிவு செய்து பெரியசாமி, அஜித் இருவரையும் கைது செய்தார்.

Tags : teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை