போச்சம்பள்ளி அருகேகாரில் கடத்திய 1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்

போச்சம்பள்ளி, ஜன.19: போச்சம்பள்ளி அருகே, காரில் கடத்திய 1.6 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போச்சம்பள்ளி தாலுகாவில் ரேஷன் அரிசி கடத்துவதாக, அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் பொறியாளர் தனசேகரன், கிராம புறங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பட்டகப்பட்டி கிராமத்தில் வந்த காரை நிறுத்த முயன்றனர். அப்போது அதிகாரிகளை கண்ட டிரைவர், காரை நிறுத்தி விட்டு, தப்பி ஓடி விட்டார். பின்னர், அந்த காரை சோதனை செய்த போது, சுமார் 1600 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதனை போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் யாருடைது? அரிசி கடத்த முயன்றவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: