×

தூள்செட்டி ஏரியில் கிராம சபைக்கூட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தர்மபுரி, ஜன.19: பாலக்கோடு அருகே தூள்செட்டி ஏரியில், திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். பின்னர், கடகத்தூரில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, இன்பசேகரன் எம்எல்ஏ ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், பாலக்கோடு ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், குட்டி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சூடப்பட்டி சுப்பிரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, காரிமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் கோபால், குமரவேல், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், வழக்கறிஞர் அணி முருகன், முன்னாள் மாவட்ட பொருளாளர் தர்மசெல்வன், வக்கீல் சந்திரசேகரன், புதூர் பழனிசாமி, மாவட்ட மாணவரணி மணிவண்ணன், வக்கீல் இளவரசு, மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திகேயன், முத்துராஜ், கவுன்சிலர் நாகராஜ், தர்மபுரி ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, டாக்டர் பிரபு ராஜசேகர், ஆறுமுகம், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் ஏஎஸ் சண்முகம், எச்சனஅள்ளி சண்முகம், இலக்கிய அணி அமைப்பாளர்கள் பொன்.மகேஸ்வரன், கோவிந்தசாமி, போஸ்கோ, செல்வராஜ், ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கவுன்சிலர் சென்னையன், ஏரியூர் துணை செயலாளர் சம்பத்குமார், தொழிலதிபர் கமலேசன், நகர பொறுப்பாளர் அன்பழகன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், நாட்டான் மாது, தங்கமணி, தொண்டரணி ராஜா, கிருஷ்ணகுமார், செங்கண்ணன், வேடம்மாள், சந்திரமோகன், சௌந்தராஜன், அரூர் அன்பழகன், பழனி, வடமலை முருகன், ஏசி மோகன், திருமால்செல்வன், வாசுதேவன், பூங்கொடி, தனேந்திரன், சதாசிவம், மணிமாறன், கீரை சங்கர், பழனி, ராஜேந்திரன், ஆசிரியர் சுரேஷ், சேகன், சண்முகம், பொறியாளர் சென்னகிருஷ்ணன், மருத்துவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : village council meeting ,Tulchetti Lake ,
× RELATED கொட்டாம்பட்டி பகுதியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்