முத்தரையர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

தஞ்சை,ஜன.19: தஞ்சையில் முத்தரையர்கள் நலச்சங்க ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒரத்தநாடு முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் துரைமாணிக்கம் தலைமை வகித்தார். துணை செயலாளர் மணிமாறன் வரவேற்றார். கூட்டத்தில், தஞ்சையில் முத்தரையர்களுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். ஒரத்தநாடு தொகுதியில் முத்தரையரை வேட்பாளராக சுயேட்சையாக நிறுத்தி வெற்றி பெற செய்வோம். முத்தரையர் சமுதாயத்தில் உள்ள 29 பிரிவுகளை ஒருங்கிணைத்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் 20 சதவீதம் உள் இடஒதுக்கீடுசெய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம். முத்தரையர் சமுதாயத்தில் உயர் பதவியிலிருந்த ஒருவரக்கு தேர்வாணைக்குழு உறுப்பினரை நியமனம் செய்ய வேண்டும். மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: