மது பதுக்கி விற்ற 11 பேர் கைது

கறம்பக்குடி, ஜன.19: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கறம்பக்குடி அடுத்த பூவாளூரை சேர்ந்த நாடிமுத்து (40), குலத்திரான்பட்டு பார்த்திபன் (28), கண்டியன் தெரு அண்ணாதுரை (48), இடையாத்தி வடக்கு தெரு குமார் (35), சாந்தம்பட்டி ஜீவானந்தம் (48), பல்லவராயன்பத்து பெண்மணி இளமுருகு (45), அக்ரகாரம் பகுதியை சேர்ந்த ராமன் (45), குலத்திரான்பட்டு முத்துக்குமார் (45), மேல மஞ்சுவிடுதி வைத்திலிங்கம் (50), குலத்திரான்பட்டு செல்வம் (60) மற்றும் சிதம்பரம் ஆகிய 11 பேரையும் வெவ்வேறு இடங்களில் மது பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.

Related Stories: