செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்த பாலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு இரும்பேடு கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (45) மேலாளராகவும், உதவியாளராக சங்கர் (38) ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்த கடையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை அதிகமாக நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார், சங்கர் ஆகியோர் வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு விற்பனையான ₹7.8 லட்சத்துடன், பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். அம்மனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து, 2 பைக்குகளில் வந்த 4 பேர், சுரேஷ்குமாரின் பைக்கை மறித்தனர். இதை கண்ட அவர்கள், தப்பிக்க முயன்றனர்.ஆனால், மர்மநபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் 2 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு, அவர்களிடம் இருந்த ₹7.8 லட்சத்தை பறித்து கொண்டு தப்பினர்.