மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர்கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, எஸ்பி கண்ணன், ஏஎஸ்பி சுந்தரவதனம், ஏடிஎஸ்பி பொன்ராம் ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். அதிரடிப்படை போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவை வரவழைக்கப்பட்டன. பின்னர், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, ஒத்திகையில் ஈடுபட்டனர்.