செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரம் மேட்டுத் தெரு தர்மராஜா கோயில் பகுதியில் மக்கள் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. நகர திமுக செயலாளர் ச.நரேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர்.ராஜி, தனசேகர், முனுசாமி, நகர இளைஞர் அணி செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தலைமை பேச்சாளர் சேலம் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், செங்கல்பட்டு நகருக்கு கடந்த 4 ஆண்டுகளில், எம்எல்ஏ நிதியில் இருந்து இதுவரை ₹3.5 கோடி ஒதுக்கி சாலை மற்றும் குடிநீர் வசதி, கல்வெட்டு ஆகிய பணிகள் நிறைவேற்றியுள்ளேன். செங்கல்பட்டு நகரின் நீண்டநாள் பிரச்னையான பாதாள சாக்கடை திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும்.