2 குழந்தைகள் மீட்பு சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி

பாடாலூர் ,ஜன. 19: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி அமுதா (45). இவர் நேற்று இரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: