ஒன்றரை கிலோ பறிமுதல் கண்ணக்குடியில் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி

மண்ணச்சநல்லூர், ஜன. 17: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கண்ணக்குடி கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடப்பதற்கான முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என வெளியூர்களில் இருந்து காளைகளுடன் வந்திருந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

Related Stories: