×

ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

தஞ்சை, ஜன.17: தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி திறக்கப்படுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து பேசும்போது, தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகள் வரும் 19ம் தேதி முதல் செயல்பட உள்ளது. இதற்காக அன்றைய தினம் திறக்கப்பட உள்ள பள்ளிகளில் அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் முறையாக கடைபிடிக்க வேண்டும். பள்ளி திறக்கப்படும்போது ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகையின்றி செயல்பட அறிவுறுத்த வேண்டும். மேலும் பள்ளிக்கு வந்த பின் மாணவர்களுக்கு ஏதேனும் உடல் குறைபாடுகள், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி வைக்க தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக், சிபிஎஸ்சி, சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 438 பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 35,132 மாணவ, மாணவிகளும், பிளஸ் 2 படிக்கும் 29,488 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். அவர்கள் பள்ளிக்கு வரும்போது பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத்துறையின் மூலம் வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படுவது உறுதி செய்ய வேண்டும்.
தமிழக முதல்வரின் உத்தரவுபடியும், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காணொலி காட்சி வாயிலாக தெரிவிக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் முறையைக் கடைபிடித்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். ஆய்வுக் கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் தொடர்புடைய அனைத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறை பின்பற்ற வேண்டும்

Tags : consultation meeting ,
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...