ஜெயங்கொண்டம், ஜன.17: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி, கடாரங்கொண்டான், ஆயுதகளம் , உட்கோட்டை, இடைக்கட்டு, கொக்கரனை தொட்டிக்குளம், யுத்தப்பள்ளம், குருவாலப்பா கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், கடலை, சம்மங்கி, மிளகாய், துவரை, காய்கறிகள் என பல்வேறு பயிர்கள் பொன்னேரி பாசனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் தற்போது பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நெல் மணிகள் நீரில் மூழ்கியும், சில வயல்களில் நெற்பயிர்கள் முளைத்தும் சம்மங்கி,கடலை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களும் கருகியும், கடலைகள் முளைக்காமலும் வீணாகி உள்ளது. இதனை அதிகாரிகள் சரியாக முறையான கணக்கெடுத்து ஏக்கருக்கு 40 - 50 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.