காரைக்கால், ஜன.17: காரைக்கால் நகர காவல்நிலைய போலீசார் நடத்திய வாகன சோதனையில் நாகையை சேர்ந்த பைக் திருடனை கைது செய்த போலீசார் மொத்தம் 14 பைக்குகளை பறிமுதல் செய்தனர். காரைக்கால் மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காரைக்கால் நகர காவல் நிலைய எஸ்ஐ ராமசாமி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது காரைக்கால் விக்ரம்சாரபாய் சாலையில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தபோது உரிய ஆவணங்கள் வைத்திருக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் நாகை சாமந்தான்பேட்டை அமிர்தாநகரை சேர்ந்த கலைவாணன் மகன் கலைகுமார் (26) என்பதும், அவர் ஓட்டி வந்த ைபக் திருட்டு பைக் என்பதை ஒப்புக்கொண்டார். அதையடுத்து கலைகுமாரை கைது செய்தனர்.