சாத்தூர், ஜன. 17: சாத்தூர் வைப்பாற்றில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த மணல் மேட்டு திருவிழாவிற்கு கொரோனா பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து போயினர். சாத்தூரில் காணும்பொங்கல் அன்று வைப்பாற்றில் நடக்கும் மணல் மேட்டு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 200 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இத்திருவிழாவில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆடிப்பாடி மகிழ்வது வழக்கம். அதேபோல் கடந்த காலங்களில் இந்த மணல் மேட்டு திருவிழாவை ஒட்டி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் குடும்பத்தினர் தங்களுடைய பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் வைபங்களும் நடைபெற்று வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.