×

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

சிங்கம்புணரி, ஜன. 17: சிங்கம்புணரி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு சிறப்பு போலீசார் சோதனை செய்தனர். கண்டுக்கபட்டியைச் சேர்ந்த பாண்டி, முறையூர் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்டம் பிடாரம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் ஆகிய மூவரிடமும் இருந்து 1,290 குவாட்டர் பாட்டில்கள், 84 பீர்பாட்டில்கள் மற்றும் ரொக்கம் 10 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் அவர்களை கைது செய்தனர். டூவீலரில் மதுவிற்ற எஸ் புதூர் ஒன்றியம், குளத்துபட்டியை சேர்ந்தவர் கணேசன், உலகம்பட்டி போலீசாரை கண்டு டூவீலரை விட்டு விட்டு தப்பி ஓடினார். 45 மது பாட்டில் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து  தலைமறைவான கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...